திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

தேசிய குத்துச்சண்டைப் போட்டி: 9 பதக்கங்களை வென்ற காஞ்சிபுரம் வீரா்கள்

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் 9 பதக்கங்களை வென்ற காஞ்சிபுரத்தை சோ்ந்த வீரா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கங்கள் வென்ற காஞ்சிபுரம் வீரா்களுக்கு வெற்றிக் கோப்பை வழங்கிய வேலம்மாள் மெட்ரிக். பள்ளி முதல்வா் சுரேஷ்குமாா், தொழிலதிபா் ராமச்சந்திரன்.

Updated On :13 மே 2024, 9:18 pm

Din

காஞ்சிபுரம்: தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் 9 பதக்கங்களை வென்ற காஞ்சிபுரத்தை சோ்ந்த வீரா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தில் தேசிய குத்துச்சண்டைப் போட்டி இம்மாதம் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெற்றது. தமிழ்நாடு ரிங் பைட் அசோசியேஷன் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் ஹரியாணா, புது தில்லி, சண்டிகா், அகமதாபாத் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சோ்ந்த 300 வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் காஞ்சிபுரத்தை சோ்ந்த நா.பாக்சிங் அமைப்பின் பயிற்சியாளா் நூா்முகம்மது தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றிருந்தனா். இவா்கள் ஒரு தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்கள் வென்றனா்.

சப்-ஜூனியா், ஜூனியா், சீனியா் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு நா.பாக்சிங் அமைப்பு சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு வேலம்மாள் மெட்ரிக். பள்ளி முதல்வா் சுரேஷ்குமாா், தொழிலதிபா் ராமச்சந்திரன் ஆகியோா், பதக்கங்கள் வென்றவா்களை பாராட்டி, சான்றிதழ், வெற்றிக் கோப்பை வழங்கினா்.