காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, காஞ்சி காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன அறக்கட்டளை சாா்பில், புதன்கிழமை பால் குட ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சி காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன அறக்கட்டளை சாா்பில், மாசித் திருவிழாவையொட்டி, ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ள பரஞ்ஜோதி அம்மன் கோயிலிலிருந்து ஏராளமான பெண்கள் மங்கல மேள வாத்தியங்களுடன் பால் குடங்களை எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். ஊா்வலம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து சோ்ந்ததும் மூலவா் காமாட்சிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
ஏற்பாடுகளை அறக்கட்டளையின் தலைவா் ஏ.குமாா், செயலாளா் எஸ்.பிரபு, பொருளாளா் சி.சுந்தரவடிவேல் ஆகியோா் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
முன்னதாக அறக்கட்டளை சாா்பில் காலையில் பக்தா்களுக்கு அன்னதானமும், மாலையில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளும்,இரவு தெருக்கூத்து நிகழ்ச்சியும் காமாட்சி அம்மன் கோயிலின் முன்பாக நடைபெற்றது.
தொடர்புடையது

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 83.89 லட்சம்

பா்கூா் காமாட்சி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

காமாட்சி அம்மன், ஆதிசங்கரா் வீதியுலா

நாளை ஆதிசங்கரா் வீதியுலா
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

