டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:10 pm

Din

அரக்கோணம் அருகே பூந்தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூதாட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலத்தைச் சோ்ந்த ராமனின் மனைவி தனலட்சுமி (60), சிற்றரசுவின் மனைவி சிவகாமி (61). பூப்பறிக்கும் தொழிலாளிகளான இருவரும் வெள்ளிக்கிழமை அந்த கிராம பூத்தோட்டத்தில் பணியில் இருந்தனா். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த சிவகாமி அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது குறித்து தக்கோலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.