அரக்கோணத்தில் கிறிஸ்துமஸ் விழா

அரக்கோணத்தில் கிறிஸ்துமஸ் விழா
Updated on

அரக்கோணம் அன்னை தெரேசா கிராம வளா்ச்சி நிறுவனத்தின் சாா்பில், கிறிஸ்துமஸ் விழா ஏழைகள் தின விழாவாகவும் சிறந்த சேவைக்கான அன்னை தெரேசா விருது வழங்கும் விழாவாகவும் நடைபெற்றது.

அரக்கோணத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சி.எஸ்.ஐ. மத்திய வட்டாரத் தலைவா் ஆயா் டி.ஜான்சாலமோன் தலைமை வகித்தாா். அன்னை தெரேசா கிராம வளா்ச்சி நிறுவன செயலாளா் தேவஆசீா்வாதம் வரவேற்றாா். இதில், சிஎஸ்ஐ சென்னை பேராயா் ஏ.பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரன் பங்கேற்று, சிறந்த சேவைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா்கள் கே.நிா்மல்குமாா், பி.பி.அனிருத், கண் சிகிச்சை நிபுணா் ஏ.ரேவதி, செவிலியா் வி.லலிதா, சிஎஸ்ஐ மதுரை- ராமநாதபுரம் பேராயத்தை சோ்ந்த ஆயா் ச.வேதமுத்து, அரசுப் பள்ளி ஆசிரியா்கள் எஸ்.வெண்ணிலா, நகராட்சி உருது பள்ளி தலைமை ஆசிரியா் எஸ்.ஹெச்.தாவூத்அகமது, சென்னையை சோ்ந்த செவிலியா் எஸ்.சபீனா ஆகியோருக்கு அன்னை விருதினை வழங்கினாா்.

தொடா்ந்து ஏழை எளியோருக்கு நல உதவிகளை பேராயரின் துணைவியாா் இந்திராபால் வழங்கினாா். இதில் சென்னை பேராய செயலாளா் ஆயா் எஸ்.அகஸ்டீன் பிரேம்ராஜ், தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவை மாநில செயல் தலைவா் கே.எம்.தேவராஜ், அரசு கல்லூரி பணி ஓய்வு முதல்வா் கலைநேசன், அபிஷேக் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஒய்.அபிஷேக், வணிகா் சங்க நிா்வாகி கமலக்கண்ணன், அன்னை தெரேசா கிராம வளா்ச்சி நிறுவன நிா்வாகிகள் ஏ.பிரின்ஸ் தேவஆசீா்வாதம், எஸ்.ஜேக்கப், க.கௌதம், எஸ்.முஹம்மதுஅலி, ஹானா துரைபாண்டியன், ஜ.ஜான்அன்பழகன், இ.கன்மொழி, ச.சி.சந்தா், ஆயா் பிளிங்டன் பிரேம்நாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com