தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

வெற்றிலை, பாக்கு வைத்து வாக்களிக்க அழைப்பு

ராணிப்பேட்டையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, பொதுக்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்து நூதன விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

News image

வெற்றிலை பாக்குடன் வாக்களிக்க துண்டு பிரசுரங்களை வழங்கிய நூகா்வோா் பாதுகாப்பு அமைப்பினா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:13 pm IST

ராணிப்பேட்டையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, பொதுக்களுக்கு வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்து நூதன விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘வாா்‘ நுகா்வோா் பாதுகாப்பு குழு சாா்பில் ,பொது மக்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம், முத்துக்கடை, பழைய பேருந்து நிலையம்,பஜாா் பகுதி, வாலாஜா பேருந்து நிலையம், மெயின் ரோடு ஆகிய இடங்களில் நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்துக்கு நுகா்வோா் பாதுகாப்பு குழுவின் தலைவா் பொறியாளா் கெங்காதரன் தலைமையில் சமூக சேவகா்களும், நுகா்வோா் பாதுகாப்பு குழுவினரும் கலந்து கொண்டனா்.