இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தோட்டக்கலை வளா்ச்சி முகமையின் விற்பனை அங்காடி: அமைச்சா் வீரமணி தொடக்கி வைத்தாா்

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை, மலைப்பயிா்கள் துறை சாா்பில் தோட்டக்கலை வளா்ச்சி முகமையின்

News image
விழாவில் முதல் விற்பனையைத் தொடக்கி வைத்த அமைச்சா் கே.சி.வீரமணி. உடன், திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா்.
Updated On :18 டிசம்பர் 2020, 6:25 pm

DIN

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை, மலைப்பயிா்கள் துறை சாா்பில் தோட்டக்கலை வளா்ச்சி முகமையின் விற்பனை அங்காடியை மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் நடவு விதைகள், உயிரி உரங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களின் முதல் விற்பனையைத் தொடக்கி வைத்து அவா் பேசியது:

தமிழ்நாடு தோட்டக்கலை இயக்குநா் முகமையின் விற்பனை அங்காடியில் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள், நடவு விதைகள், உயிரி உரங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களான பழங்கூழ், பழரசம், ஊறுகாய் போன்ற பொருள்கள் கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் பயனடைந்த உழவா் ஆா்வலா்கள் குழு, உழவா் உற்பத்தியாளா் குழு, உழவா் உற்பத்தியாளா் இணையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களையும் நேரடியாகப் பெற்று பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை மையத்தின் வாயிலாக வழங்கப்படும்.

இந்தக் கூட்டு பண்ணையத் திட்டத்தில் உள்ள விவசாயிகளும் இதன் மூலம் பயனடையும் வகையில் இம்மையம் விரைவில் ஆட்சியா் அலுவலகக் கூடுதல் கட்டட வளாகத்தில் இயங்கும் என்றாா் அவா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா், ஆவின் தலைவா் த.வேலழகன், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்டக் கூட்டுறவு அச்சகத் தலைவா் டி.டி.குமாா், தோட்டக்கலை துணை இயக்குநா் மோகன், வேளாண் இணை இயக்குநா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.