இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆம்பூர் பகுதியில் நள்ளிரவு முழுவதும் கனமழை  - நீர்நிலைகள் நிரம்பின

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு முழுவதும் கனமழை பெய்தது.

News image
அரங்கல்துருகம் ஊராட்சி அரங்கல்துருகம் கிராமத்தில் கட்டட தொழிலாளி சரவணன் கூரை வீடு கனமழையால் முற்றிலும் சேதமானது.
Updated On :30 ஜூன் 2020, 7:17 am

DIN

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு முழுவதும் கனமழை பெய்தது. அதன் காரணமாக ஆம்பூர் சுற்றுப்புற கிராம பகுதிகளில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர் நிரம்பி வருகின்றன.

ஆம்பூர் பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவு முழுவதும் கனமழை பெய்தது. அதனால் ஆம்பூரில் 72.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வடபுதுப்பட்டு கிராமத்தில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில்54.02 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 

கானாற்றில்  வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு  நீர்நிலைகளுக்கு  நீர் வரத்து  அதிகரித்துள்ளது.  

ஆம்பூர் நகரில் பெத்லகேம் பகுதிக்கு செல்லும் இரண்டு இரயில்வே குகை வழிப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கியது. ஆம்பூர் கந்தபொடிகார தெரு, ஈஸ்வர தெரு, காதர்பேட்டை மற்றும் தாழ்வான பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

Story image

 ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி சாமியார் மூலை தடுப்பணை நிரம்பி வழிகிறது.

கனமழை காரணமாக மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கொச்சேரி கானாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  

அரங்கல்துருகம் ஊராட்சி காரப்பட்டு தேவுடு கானாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காட்டுவெங்கடாபுரம் முனியப்பன் ஏரி நிரம்பி வழிந்தது. மத்தூர்கொல்லை நந்தி சுனையிலிருந்து நீர் பொங்கி நீர்வீழ்ச்சி போல கொட்டியது.

ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரி நிரம்பிக் கொண்டிருக்கின்றது.

அரங்கல்துருகம் ஊராட்சி  சாமியார் மூலை தடுப்பணை நிரம்பி வழிந்து தண்ணீர் ஓடியது. அரங்கல்துருகம் கிராமத்தில் கட்டட தொழிலாளி சரவணன் என்பவரின் கூரை வீடு கனமழைக்கு சேதமடைந்து சரிந்து விழுந்தது.  

கரும்பூர் ஊராட்சி சின்னகரும்பூர் கிராமத்தில் கானாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தடுத்து கானாற்றில் சிக்கிய மரம், செடி, முட்புதர்கள் அடைப்பு ஏற்பட்டதால் ஜேசிபி மூலம் தூர்வாரப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.