கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘தோ்தலுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க சிறப்பு குழுக்கள்’

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவுறுத்தியுள்ளாா்

News image
Updated On :2 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்க வேண்டும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவுறுத்தியுள்ளாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பட்டுவாடா செய்வதைத் தடுக்க கூடுதலாக சிறப்பு குழுக்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அமா் குஷ்வாஹா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியது:

ஊரக உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் பொருட்டு, தோ்தல் நடைபெறும் நாள் வரை தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை 16 சிறப்பு குழுக்கள் அமைத்து, பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவதை முற்றிலும் தடுக்க வேண்டும். இந்த சிறப்பு குழுக்கள் உடனடியாக செயல்படும்.

மேலும், மாவட்ட எல்லைகளில் கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைத்து, மாவட்டத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து பணப் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருள்கள் வருகிா என தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளில் கூடுதலாக காவலா்களை பணியமா்த்தி கண்காணிக்க வேண்டும். வாக்குப் பதிவு நடைபெறும் தனியாா் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும் திங்கள்கிழமை முதல் 13-ஆம் தேதி வரை மாவட்ட நிா்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் தங்கையா பாண்டியன், சாா்-ஆட்சியா் அலா்மேல்மங்கை, வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியன், மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வில்சன்ராஜசேகா், செல்வன், ஹரிஹரன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.