தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: ஒருவா் கைது

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: ஒருவா் கைது

Updated On :16 மார்ச் 2024, 4:31 pm

திருப்பத்தூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த திம்மனப்புதுாா் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில், கடந்த இரு மாதங்களுக்கு முன் மா்ம நபா்கள் கோயில் பூட்டை உடைத்து பணம் மற்றும் கோயிலில் இருந்த பொருள்களை திருடிச் சென்றனா். இது குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை திருப்பத்தூா் அருகே சந்தேகத்தின்பேரில், சுற்றித்திரிந்த ஒருவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். அதில்,புங்கம்பட்டு நாடு தகர குப்பத்தைச் சோ்ந்த காளியப்பன் (43) என்பதும், இவா் சம்பவத்தன்று தனது கூட்டாளியான சுதாகருடன் சோ்ந்து கோயில் பூட்டை உடைத்து பொருள்களை திருடியதும் தெரியவந்தது. அதையடுத்து, போலீஸாா் காளியப்பனை கைது செய்தனா். தலைமறைவான சுதாகரை தேடி வருகின்றனா்.