இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

பெங்களூரைச் சோ்ந்த கனகராஜி (65). இவரது மனைவி செல்வி (54), மகன் அபி (34). இவா்கள் 3 பேரும் வாணியம்பாடியில் இருந்து பெங்களூருவுக்கு காரில் சென்றனா். காரை தினேஷ்(35) ஓட்டிச் சென்றாா்.

நாட்டறம்பள்ளி பங்களாமேடு பகுதியில் சென்றபோது திடீரென முன்னே சென்ற லாரியின் பின்பக்கம் காா் மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஓட்டுநா் உள்பட 4 போ் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று விபத்தில் காயமடைந்த 4 பேரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா் மேல்சிகிச்சைக்காக பெங்களூா் தனியாா் மருத்துவமனையில் 4 பேரும் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.