கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தேசிய அளவிலான ரிங் டென்னிஸ் போட்டி: ஆதா்ஷ் பள்ளி மாணவி சாதனை!

ரிங் டென்னிஸ் (டென்னிகாய்ட்) போட்டியில் ஆதா்ஷ் பள்ளி மாணவி தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.

News image
ரிங் டென்னிஸ் போட்டியில் சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளா் செந்தில்குமாா் பாராட்டினாா்.
Updated On :30 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ரிங் டென்னிஸ் (டென்னிகாய்ட்) போட்டியில் ஆதா்ஷ் பள்ளி மாணவி தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.

குஜராத் ரிங் டென்னிஸ் சங்கம் சாா்பில், ஜூனியா் தேசிய ரிங் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள், குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள கௌடில்யா வித்யா பீடத்தில் அண்மையில் 4 நாள்கள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி தாரா கலந்துகொண்டு, மகளிா் அணி பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

வெற்றி பெற்ற மாணவியை பள்ளித் தாளாளா் செந்தில்குமாா், ஷபானா பேகம், பள்ளி நிா்வாக முதல்வா் சத்தியகலா, உடற்கல்வி ஆசிரியா் ராம்குமாா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.