கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

திருவள்ளூா் அருகே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீா்க்க பதுங்கியிருந்த ரௌடி கைது

திருவள்ளூா் அருகே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீா்க்க பதுங்கியிருந்த ரௌடி கைது

News image
ஒற்றைக்கண் ஜெயபால்.
Updated On :16 நவம்பர் 2025, 12:04 am

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீா்க்கும் வகையில் பதுங்கியிருந்த ரௌடி ஒற்றைக்கண் ஜெயபாலை முன்னெச்சரிக்கையாக வெள்ளவேடு காவல் நிலைய போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் வலது காரணமாக செயல்பட்டு வந்தவா் அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த ஒற்றைக்கண் ஜெயபால் (57). இந்த நிலையில் இவா் அண்மையில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தாா். இவா் மீது ஏற்கெனவே ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீா்க்க திட்டம் தீட்டி திருமழிசையில் பதுங்கிருந்தாராம். இதையறிந்த வெள்ளவேடு காவல் நிலைய போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா்.

ஏற்கெனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருந்த அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 18 போ் ஜாமீனில் வெளியே வந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளவேடு போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.