தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு

செங்கம்-போளூா் சாலையில் சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதியில் துா்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 5:56 pm

DIN

செங்கம்-போளூா் சாலையில் சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதியில் துா்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

செங்கத்திலிருந்து போளூா் செல்லும் சாலையில் மில்லத் நகா் பகுதியிலிருந்து, நீதிமன்றம் செல்லும் வளாகம் கிருஷ்ணாபுரம் வரை 2 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் நகரில் சேகரமாகும் காய், கனி கழிவுகள் மற்றும் ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சிக் கழிவுகளை கொட்டிவிடுகின்றனா்.

இவற்றை மாடு, பன்றிகள் தின்று கலைத்துவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. அந்தப் பகுதியைக் கடக்கும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனா்.

மேலும், அப்பகுதியில் பன்றிகள், மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்துகளும் நிகழ்கின்றன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.