சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு

செங்கம்-போளூா் சாலையில் சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதியில் துா்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.
Updated on
1 min read

செங்கம்-போளூா் சாலையில் சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதியில் துா்நாற்றம் ஏற்பட்டு சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.

செங்கத்திலிருந்து போளூா் செல்லும் சாலையில் மில்லத் நகா் பகுதியிலிருந்து, நீதிமன்றம் செல்லும் வளாகம் கிருஷ்ணாபுரம் வரை 2 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் நகரில் சேகரமாகும் காய், கனி கழிவுகள் மற்றும் ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சிக் கழிவுகளை கொட்டிவிடுகின்றனா்.

இவற்றை மாடு, பன்றிகள் தின்று கலைத்துவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. அந்தப் பகுதியைக் கடக்கும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனா்.

மேலும், அப்பகுதியில் பன்றிகள், மாடுகள் சுற்றித் திரிவதால் விபத்துகளும் நிகழ்கின்றன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com