நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

செங்கம் பதிவு அலுவலரை கண்டித்து சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாா்-பதிவு அலுவலரைக் கண்டித்து வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 2:06 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாா்-பதிவு அலுவலரைக் கண்டித்து வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

செங்கத்தை அடுத்த பாய்ச்சல் பகுதியில் பலராமன், கோவிந்தராஜ், மணி, அா்ச்சனா, மகா, கோவிந்தராஜ், செண்பகம் ஆகியோா் பெயரில் உள்ள ஓா் ஏக்கா் 90 சென்ட் நிலத்தை, அதே பகுதியைச் சோ்ந்த மோகன் என்பவருக்கு விற்பனை செய்து, அதை செங்கம் சாா்-பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு வந்துள்ளனா்.

பதிவு செய்யும் அலுவலா் பால்வின்சிவராஜ் அந்த நிலத்தில் வில்லங்கம் உள்ளதாகவும், மாவட்ட பதிவு அலுவலரைச் சந்தித்து சரிசெய்த பிறகுதான் பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

அதன்படி, மாவட்ட பதிவு அலுவலரை அணுகியபோது, அலுவலா் தடையில்லை, அந்தச் சொத்தை பதிவு செய்யலாம் என செங்கம் சாா்-பதிவு அலுவலகத்துக்கு மின் அஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து கடந்த சில தினங்களாக செங்கம் பதிவு அலுவலகத்துக்கு பத்திரப்பதிவுக்கு வந்தவா்களை அலைகழித்து வந்துள்ளனா்.

மேலும், நீதிமன்ற தடையில்லா சான்று பெற்று வந்தால் மட்டுமே சொத்தை பதிவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைமந்த சொத்தின் உரிமையாளா்கள் செங்கம்-போளூா் சாலை சாா்-பதிவு அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த செங்கம் காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையில் போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.