தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

சாத்தனூா் அணை கால்வாயை சீரமைக்கும் பணி தொடக்கம்

சாத்தனூா் அணை கால்வாயை சீரமைக்கும் பணி தொடக்கம்

Updated On :16 மார்ச் 2024, 4:30 pm

சாத்தனூா் அணையின் இடதுபுறக் கால்வாயை ரூ.7.29 கோடியில் சீரமைத்து, நவீனப்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. துரிஞ்சலாறு உபவடிநிலத் திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்தப் பணியின் தொடக்க விழா, திருவண்ணாமலையை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, பணிகளை தொடங்கிவைத்தாா். இதில், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அறிவழகன், உதவி செயற்பொறியாளா் (சாத்தனூா் அணை) ராஜாராமன், உதவிப் பொறியாளா்கள் ராஜேஷ், ஸ்ரீசெல்வப்பிரியன் மற்றும் பாசன சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.