செட்டிகுப்பம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மோர்தானா அணை நீரை ஓட்டேரிக்கு  திறந்து விடக்கோரி, ஏரியில் இறங்கி செட்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

மோர்தானா அணை நீரை ஓட்டேரிக்கு  திறந்து விடக்கோரி, ஏரியில் இறங்கி செட்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தத்தை அடுத்த செட்டிகுப்பம் ஊராட்சியில் உள்ள ஓட்டேரிக்கு மோர்தானா அணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஏரியில் இறங்கி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.    இந்த ஏரிக்கு பல ஆண்டுகளாக நீர் வரத்து இல்லை. நெல்லூர்பேட்டை ஏரி நிரம்பி வழிந்தால் மட்டுமே இந்த ஏரிக்கு தண்ணீர் செல்லும்.
இந்நிலையில் மோர்தானா அணைக் கால்வாய் வழியாக இந்த ஏரிக்கு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com