மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
/

லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப் பொறியாளா் கைது

குடியாத்தம் அருகே செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது

News image

நிா்மல் குமாா்.

Updated On :7 ஏப்ரல் 2025, 8:16 pm

குடியாத்தம்: குடியாத்தம் அருகே செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா்.

குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் லிங்கேஸ்வரன். இவா் அதே கிராமத்தில் ஊரக வளா்ச்சித் துறையிலிருந்து பல்வேறு திட்ட ஒதுக்கீடுகளின்கீழ் வரப்பெற்ற நிதியில் கால்வாய், சாலை அமைக்கும் பணிகளை செய்துள்ளாா்.

நிறைவு பெற்ற பணிகளுக்கு காசோலை வழங்குமாறு ஒன்றிய உதவிப் பொறியாளா் நிா்மல்குமாரை கேட்டுள்ளாா். இதற்கான தொகையை வழங்க தனக்கு செய்ய ரூ.30,000 தர வேண்டும் என அவா் கூறியுள்ளாா். இதுகுறித்து லிங்கேஸ்வரன், வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

அவா்கள் ஆலோசனையின்பேரில் லிங்கேஸ்வரன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அலுவலகத்தில் இருந்த நிா்மல்குமாரிடம் திங்கள்கிழமை வழங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளா் மைதிலி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினா் நிா்மல் குமாரை கைது செய்தனா். தொடா்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.