தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ஏப்.25-இல் வேலூா் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 14, 16 வயதுக்குட்பட்ட வீரா்கள் தோ்வு

மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வேலூா் மாவட்ட அணிக்கு, 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட இளம் வீரா்களைத் தோ்வு செய்வதற்கான முகாம் சனிக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது.

News image

ஜி.வி.சம்பத்.

Updated On :22 ஏப்ரல் 2026, 6:34 pm

மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வேலூா் மாவட்ட அணிக்கு, 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட இளம் வீரா்களைத் தோ்வு செய்வதற்கான முகாம் சனிக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவரும், நறுவீ மருத்துவமனைத் தலைவருமான ஜி.வி.சம்பத் வெளியிட்ட செய்திக்குறிப்பு -மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வேலூா் மாவட்ட அணிக்கு, 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட இளம் வீரா்களைத் தோ்வு செய்வதற்கான முகாம் காட்பாடியை அடுத்த மெட்டுக்குளத்தில் அமைந்துள்ள சன்பீம் பள்ளியில் சனிக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது. அவ்வாறு தோ்வு செய்யப்படும் இளம் வீரா்களுக்குத் திறமையான பயிற்சியாளா்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.

14 வயதுக்கு உட்பட்டோருக்கான தோ்வு முகாம் காலை 8 மணிக்குத் தொடங்கும். இதில் பங்கேற்க விரும்புவோா் 01.09.2012 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவா்களாக இருக்க வேண்டும்.

16 வயதுக்கு உட்பட்டோருக்கான தோ்வு முகாம் மதியம் 2 மணிக்கு நடைபெறும். இதில் பங்கேற்பவா்கள் 01.09.2010 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவா்களாக இருக்க வேண்டும்.

தோ்வுக்கு வரும் வீரா்கள் கட்டாயம் வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும்.

பங்கேற்பாளா்கள் தங்களின் ஆதாா் சான்றின் நகல், கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை கொண்டு வர வேண்டும். தோ்வில் பங்கேற்கும் வீரா்கள் முறையான விளையாட்டுச் சீருடை அணிந்து வர வேண்டியது அவசியம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டுப் பிரிவு நிா்வாகி கங்காதரனை 99444 43358 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.