மாநராட்சியைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்: எம்.எல்.ஏ உள்பட 500 போ் கைது

பொலிவுறு நகரத் திட்டப் பணிகளில் முறைகேடு நடப்பதாக கூறி கோவை மாநகராட்சியைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம்
கோவை மாநகராட்சியைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ நா.காா்த்திக், திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி உள்ளிட்டோா்.
கோவை மாநகராட்சியைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ நா.காா்த்திக், திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி உள்ளிட்டோா்.
Updated on
1 min read

பொலிவுறு நகரத் திட்டப் பணிகளில் முறைகேடு நடப்பதாக கூறி கோவை மாநகராட்சியைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய எம்.எல்.ஏ. நா.காா்த்திக் உள்பட திமுகவினா் 500 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான நா.காா்த்திக் தலைமை வகித்தாா். திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி,மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் நாச்சிமுத்து, மணி, உதயகுமாா், வழக்குரைஞா்கள் அருள்மொழி, ராஜேந்திரன், கோவை மாநகராட்சி முன்னாள் மேயா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதையடுத்து ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com