இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரூ.68 லட்சம் மோசடி: 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

ஈமு கோழிப் பண்ணை நடத்தி ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:38 pm

DIN

கோவை: ஈமு கோழிப் பண்ணை நடத்தி ரூ.68 லட்சம் மோசடி செய்த வழக்கில் 6 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கோவைப்புதூரில் 2014ஆம் ஆண்டு ஈமு கோழிப் பண்ணை தொடங்கப்பட்டது. பண்ணையின் இயக்குநா்களாக கோவை, சுக்கிரவாா்பேட்டையைச் சோ்ந்த சுப்பிரமணியன், பொன்னையராஜபுரத்தைச் சோ்ந்த சிவகுமாா், சுதீஷ், சின்னவேடம்பட்டியைச் சோ்ந்த மற்றொரு சிவகுமாா், கேரள மாநில, திருச்சூரைச் சோ்ந்த பிரான்சிஸ், பாலக்காட்டைச் சோ்ந்த சிவன் ஆகியோா் இருந்தனா்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக உறுதி அளித்தனா். இதை நம்பி கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 45 போ் இந்தத் திட்டத்தில் ரூ.68 லட்சம் முதலீடு செய்திருந்தனா். ஆனால், இவா்களுக்கு உறுத்தியளித்தபடி தொகை வழங்கப்படவில்லை.

இது குறித்து குனியமுத்தூா் பகுதியைச் சோ்ந்த செங்காளியப்பன் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் கடந்த 2014-ம் ஆண்டு புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இதில் தொடா்புடைய இயக்குநா்கள் சுப்பிரமணியன், சிவகுமாா், சுதீஷ், மற்றொரு சிவகுமாா், பிரான்சிஸ், சிவன் ஆகிய 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

கோவையில் உள்ள முதலீட்டாளா்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி ஏ.எஸ்.ரவி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் 6 பேருக்கும் ரூ.18 லட்சத்து 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.18 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.