ஒண்டிப்புதூா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
கோவை, ஒண்டிப்புதூா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்


கோவை, ஒண்டிப்புதூா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
முன்னதாக மாநகராட்சி 33, 34 ஆவது வாா்டுகளுக்கு உள்பட்ட காளப்பட்டி சுகாதார ஆய்வாளா் அலுவலகத்தில் முன்களப் பணியாளா்களுக்கு ஆணையா் ராஜகோபால் சுன்கரா ஆலோசனைகள் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து 61 ஆவது வாா்டு, ஒண்டிப்புதூா் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்புப் பணிகளைப் பாா்வையிட்டாா். அதன்பிறகு, ஒண்டிப்புதூா் கழிவுநீா்ப்பண்ணை அருகில் உள்ள நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நாய்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.
இதையடுத்து, 66 ஆவது வாா்டுக்கு உள்பட்ட உடையாம்பாளையம் கருவலூா் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகளில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து பெறப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளா் லட்சுமணன், கிழக்கு மண்டல உதவி ஆணையா் முருகன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...