கோவை: கோவை ஆனைமலை புலிகள் காப்பகம் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பேட்டரி வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பழைய சின்னார்பதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வாகன வசதி இல்லாமல் பல வருடங்களாக பள்ளிக்கு குழந்தைகள் பெற்றோர்களுடன் நடந்து சென்றுள்ளனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாகன வசதி வேண்டுமென வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதையும் படிக்க: இன்றுடன் ஓய்வுபெறுகிறது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில், ஆலம் தனியார்தொண்டு நிறுவனமான பழைய சர்க்கார்பதி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல பேட்டரி வாகனம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் மலைவாழ் மக்கள் வசிக்கும் செட்டில்மெண்ட் பகுதிகளுக்கு சின்னார் பதி, நாக௹த்து, எருமை பாறை, கோழிகமுத்தி பகுதிகளுக்கு விரைவில் பேட்டரி வாகனம் செயல்படுத்தப்படும் என ஆனைமலை புலிகள் காப்பகம் கள துணை இயக்குநர் கணேசன் தெரிவித்தார். இதில் வன உதவி பாதுகாவலர் செல்வம், ஆலம் பவுண்டேஷன் நிறுவனர் லீமா ரோஸ் மார்ட்டின், வனச்சரகர் புகழேந்தி மற்றும் தன்னார்வலர்கள், வனத்துறையினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


