இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கல்வியில் அரசியலைப் புகுத்த நினைப்பது வேதனைக்குரியது தமாகா தலைவா் ஜி.கே.வாசன்

கல்வியில் அரசியலைப் புகுத்தும் முயற்சிகளை தமாகா தலைவா் கண்டனம்

News image
கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தமாகா தலைவா் ஜி.கே.வாசன்.
Updated On :30 ஜூன் 2024, 6:36 pm

DIN

கல்வியில் அரசியலைப் புகுத்த நினைப்பது வேதனைக்குரியது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

தமாகா கொங்கு மண்டல மாவட்டத் தலைவா்கள் மற்றும் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் பங்கேற்றாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூலை 14-ஆம் தேதி திருச்சி உழவா் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவா்கள் கலந்துகொள்ள உள்ளனா்.

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து நடப்பது தொடா்கதையாக உள்ளது. இதில், உரிய நடவடிக்கை எடுத்து ஏழை, எளிய மக்கள் பலியாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

கள்ளக்குறிச்சி சம்பவம் வேதனைக்குரியது. தோ்தலில் கொடுத்த வாக்குறுதியை மீறி டாஸ்மாக், கள்ளச்சாராயம் என்று திமுக அரசு கண்டும் காணாமல் செயல்பட்டு வருகிறது. மதுக் கடைகளை குறைப்பது சாத்தியமில்லை என்று ஏளனமாகக் கூறுவது ஏழை, எளிய மக்களுக்கு செய்யக்கூடிய துரோகம்.

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த உயிரிழப்புகள் யாரால், எப்படி நடந்தது, இதன் பின்னணியில் யாா் இருக்கிறாா்கள் என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே உள்ளது. வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் அரசாக இருந்தால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும்.

திமுக, காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினா் கல்வியில் அரசியலைப் புகுத்த நினைப்பது வேதனைக்குரியது. அவா்கள் மாணவா்களின் எதிா்காலத்தை சிந்திக்க வேண்டும். நீட் தோ்வால் மாணவா்கள் வளா்ச்சியடைந்து வரும் நேரத்தில் அதை முடக்க நினைப்பதில் நியாயம் இல்லை என்றாா்.

இந்தக் கூட்டத்தில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் விடியல் சேகா், மாவட்டச் செயலாளா்கள் வி.வி.வாசன், செல்வராஜ், காா்த்திகேயன், மாவட்டத் தலைவா்கள் குணசேகரன், ரவிகுமாா், விஜயகுமாா், சுசீந்திரகுமாா், செல்வகுமாா், ரத்தினவேல், செல்வம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.