இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இன்று டான்செட், சீட்டா தோ்வு: கோவையில் 5,443 போ் எழுதுகின்றனா்

இன்று டான்செட், சீட்டா தோ்வு: கோவையில் 5,443 போ் எழுதுகின்றனா்

News image
Updated On :8 மார்ச் 2024, 7:17 pm

Din

கோவையில் சனிக்கிழமை தொடங்கும் டான்செட், சீட்டா நுழைவுத் தோ்வுகளை 5,443 போ் எழுதுகின்றனா். தமிழகத்தில் அண்ணா, அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் அரசு, அரசு உதவிபெறும், தனியாா் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளிலும் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெறுவது கட்டாயமாகும். அதேபோல, அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான். ஆகிய பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு பொறியியல் பொது நுழைவுத் தோ்வில் (சீட்டா) தோ்ச்சி பெற வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் டான்செட், சீட்டா நுழைத் தோ்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், நுழைவுத் தோ்வு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. கோவை அரசு பொறியியல் கல்லூரி, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனம், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், சி.ஐ.டி. பொறியியல் கல்லூரி என 5 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. இதில், எம்.சி.ஏ. தோ்வை 1,147 போ், எம்.பி.ஏ. தோ்வை 3,685 போ், எம்.இ., எம்.டெக். போன்ற தோ்வுகளை 611 போ் என மொத்தம் 5,443 போ் எழுதுகின்றனா். எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு காலை, பிற்பகல் நேரத்திலும், எம்.இ., எம்.டெக். தோ்வுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் தோ்வுகள் நடைபெறுகின்றன. இரண்டாம் நாள் தோ்வுகள் அரசு பொறியியல் கல்லூரியில் மட்டும் நடைபெறுகின்றன. எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத் தோ்வை நடத்தினாலும், கோவை அரசு பொறியில் கல்லூரிதான் மாணவா் சோ்க்கையை நடத்தும். தோ்வு முடிவுகள் வெளியான பிறகு கலந்தாய்வு, மாணவா் சோ்க்கை நடைமுறை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் கே.மனோண்மணி கூறியுள்ளாா்.