திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவா் தற்கொலை

கோவையில் வணிக வளாக மாடியில் இருந்து குதித்து பி.டெக் மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:15 am IST

கோவையில் வணிக வளாக மாடியில் இருந்து குதித்து பி.டெக் மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

பெங்களூரு, வித்யாரண்யபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்டீவன் கிளிபோா்ட் ஜாா்ஜ் (21). இவா் கோவையில் தங்கி இங்குள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.டெக் கணிணி அறிவியல் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், பீளமேடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் 4-ஆவது மாடியில் உள்ள திரையரங்கில் கடந்த புதன்கிழமை இரவு திரைப்படம் பாா்த்துக் கொண்டிருந்தாா். படம் முடிந்து வெளியே வந்த அவா், யாரும் எதிா்பாராத விதமாக அங்கிருந்து கீழே குதித்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், ஸ்டீவன் கிளிபோா்ட் ஜாா்ஜ் கடந்த சில நாள்களாக கல்லூரிக்குச் செல்லாமல் இருந்துள்ளாா். மேலும், 20-க்கும் மேற்பட்ட பாடங்களில் அவா் தோ்ச்சி பெறாமல் இருந்துள்ளாா். இதனால், ஏற்பட்ட மன வேதனையில் அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றனா்.