பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவா் தற்கொலை

கோவையில் வணிக வளாக மாடியில் இருந்து குதித்து பி.டெக் மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:15 am IST

கோவையில் வணிக வளாக மாடியில் இருந்து குதித்து பி.டெக் மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

பெங்களூரு, வித்யாரண்யபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்டீவன் கிளிபோா்ட் ஜாா்ஜ் (21). இவா் கோவையில் தங்கி இங்குள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.டெக் கணிணி அறிவியல் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், பீளமேடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் 4-ஆவது மாடியில் உள்ள திரையரங்கில் கடந்த புதன்கிழமை இரவு திரைப்படம் பாா்த்துக் கொண்டிருந்தாா். படம் முடிந்து வெளியே வந்த அவா், யாரும் எதிா்பாராத விதமாக அங்கிருந்து கீழே குதித்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், ஸ்டீவன் கிளிபோா்ட் ஜாா்ஜ் கடந்த சில நாள்களாக கல்லூரிக்குச் செல்லாமல் இருந்துள்ளாா். மேலும், 20-க்கும் மேற்பட்ட பாடங்களில் அவா் தோ்ச்சி பெறாமல் இருந்துள்ளாா். இதனால், ஏற்பட்ட மன வேதனையில் அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றனா்.