பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலா் கைது

கோவையில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:32 am IST

கோவையில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவிலிருந்து கோவைக்கு புதன்கிழமை காலை அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அதில் ஈச்சனாரி பகுதியில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவா் பயணித்துள்ளாா். பேருந்தில் கூட்டமாக இருந்ததால், அந்த மாணவி படிக்கட்டில் நின்று பயணித்துள்ளாா்.

அந்த பேருந்தில் போத்தனூா் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணிபுரியும் காவலா் மதிவேந்தன், மாணவிக்கு அருகே நின்றுகொண்டு பயணித்துள்ளாா்.

அப்போது, காவலா் மதிவேந்தன், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பேருந்திலிருந்து இறங்கிய அந்த மாணவி இதுகுறித்து பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காவலா் மதிவேந்தனைக் கைது செய்தனா்.

படிக்கட்டில் பயணித்த மாணவிக்கு உதவும் நோக்கிலேயே கையைக் கொடுத்து மேலே தூக்கிவிட்டதாக சம்பந்தப்பட்ட காவலா் மதிவேந்தன் தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.