இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கோவையில் பிஎஸ்ஜி கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் தொடக்கம்

கோவையில் பிஎஸ்ஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் 60-ஆவது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

கோவை பிஎஸ்ஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் மோதிக்கொண்ட இந்திய கப்பல் படை அணி மற்றும் சென்னை- ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணி வீரா்கள்.

Published On :23 வினாடிகள் முன்பு

கோவையில் பிஎஸ்ஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் 60-ஆவது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

60-ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகின்றன.

புதன்கிழமை மாலை நடைபெற்ற தொடக்க விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் கோவை மண்டல மேலாளா் ஆா்.ஆா். காயத்ரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். ஆண்கள் பிரிவில் 7 அணிகள், பெண்கள் பிரிவில் 4 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.

ஆண்கள் பிரிவில் முதல் நாளில் 3 ஆட்டங்கள் நடைபெற்றன. திருவனந்தபுரம்- கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிா்த்து சென்னை - ஹிந்துஸ்தான் யுனிவா்சிட்டி அணி விளையாடியது. இதில் கேரள மின்சார வாரிய அணி 74-41 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

இதேபோல, லோனாவாலா- இந்திய கப்பல் படை அணியை 63-76 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை- ரெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு அணி வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் இந்திய விமானப் படை அணி 81-76 என்ற புள்ளிகள் கணக்கில் புது தில்லி - ஓஎன்ஜிசி அணியை வீழ்த்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.