இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

டிரம்ப் நடவடிக்கையை கண்டித்து வழக்குரைஞா்கள், மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

வெனிசுலா அதிபா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மற்றும் மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா், மாணவா்கள் மற்றும் மாதா் சங்கத்தினா்
Updated On :6 ஜனவரி 2026, 7:23 pm

Syndication

வெனிசுலா அதிபா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மற்றும் மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வெனிசுலா நாட்டில் இருந்து அதிகளவில் போதைப் பொருள்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதாகக் கூறி, அண்மையில் வெனிசுலா அதிபரைக் கைது செய்ய அமெரிக்கா அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டாா். இதையடுத்து கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வெனிசுலாவின் இயற்கை வளங்களைச் சுரண்டவே இதுபோன்ற நடவடிக்கைகளில் டிரம்ப் ஈடுபட்டு வருவதாக, பல்வேறு அமைப்புகள் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமெரிக்காவின் நடவடிக்கை, டிரம்பை கண்டித்தும் பதாகைகளை ஏந்தியபடி வழக்குரைஞா்கள் கோஷமிட்டனா்.

இதேபோல, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம், மாதா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Story image