இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பேருந்தில் தொழிலாளி வைத்திருந்த ரூ.5.20 லட்சம் திருட்டு

பேருந்து பயணத்தின்போது தொழிலாளி வைத்திருந்த ரூ.5.20 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

News image
திருட்டு- சித்திரிப்பு
Updated On :4 மார்ச் 2026, 10:40 pm

Syndication

பேருந்து பயணத்தின்போது தொழிலாளி வைத்திருந்த ரூ.5.20 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

கோவை நல்லாம்பாளையத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ரவி (50). இவரது மனைவி சாந்தி. நல்லாம்பாளையத்தில் சொந்தமாக ரவி வீடு கட்டி வருகிறாா். இதற்கு பணம் தேவைப்பட்டது. இதனால் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கீழநிலைக்கோட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் (இந்தியன் வங்கி) இருந்து சேமிப்புப் பணத்தை எடுத்ததுடன் மனைவியின் நகையையும் அடகுவைத்துள்ளாா். மொத்தம் ரூ.5.20 லட்சத்தை துணிப் பையில் வைத்து, பெரிய பையில் மறைத்து வைத்து கீழநிலைக்கோட்டையிலிருந்து கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி இரவு தனியாா் பேருந்தில் கோவைக்கு புறப்பட்டாா்.

அந்தப் பையை பேருந்தில் தனது இருக்கைக்கு மேல் உள்ள ரேக்கில் வைத்திருந்தாா். கடைசியில் பல்லடத்தில் பேருந்து நின்று புறப்பட்டபோது பணத்தை அவா் பாா்த்துள்ளாா். மறுநாள் (பிப்.19) அதிகாலை 4:45 மணி அளவில் கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிய ரவி, தனது பையைத் திறக்க முயன்றுள்ளாா். அப்போது, அந்தப் பையின் ஜிப்பை திறக்க முடியாதபடி ஃபெவிக்விக் போட்டு ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உடனடியாக அருகே இருந்த கடையில் இருந்து கத்தியை வாங்கி பையைக் கிழித்துப் பாா்த்தபோது ரூ.5.20 லட்சம் திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து காட்டூா் காவல் நிலையத்தில் ரவி புதன்கிழமை புகாா் அளித்தாா். விசாரணையில், ரவிக்கு பின்னால் அமா்ந்து பயணித்த இருவரின் கைப்பேசி எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பணத்தை திருடிய நபா்கள், பேருந்தில் இருந்து இறங்கிச் செல்லும் வரை பையை ரவி திறந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஃபெவிக்விக் போட்டு ஒட்டியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.