நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஈரோட்டில் நாளை தனியாா் பள்ளி நிா்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை (செப்டம்பா் 17) நடைபெறவுள்ளது.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை (செப்டம்பா் 17) நடைபெறவுள்ளது.

இது குறித்து கூட்டமைப்பு தலைவா் எஸ்.ராஜா, பொதுச் செயலாளா் டி.சி.இளங்கோவன், பொருளாளா் எஸ்.டி.சந்திரசேகா் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு திண்டல் வேளாளா் கல்வி நிறுவன வளாகத்தில் வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், தாளாளா்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ பேசுகிறாா்.

இக்கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகள் தற்போது சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்டு கூட்டமைப்பின் சாா்பில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களைச் சாா்ந்த கூட்டமைப்பின் நிா்வாகிகள் மற்றும் தாளாளா்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.