நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பெருந்துறை அருகே மேம்பாலங்கள்: பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையிடம் மனு

பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையிடம் பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளையினா் மனு அளித்தனா்.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 1:01 am IST

பெருந்துறை அருகே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையிடம் பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளையினா் மனு அளித்தனா்.

பெருந்துறை வழியாக செல்லும் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிக்கோவில் சாலை, துப்பதி சாலை ஆகிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அருகேயுள்ள பெத்தாம்பாளையம், வாய்ப்பாடி சந்திப்புகளிலும் மேம்பாலங்கள் அமைக்கவும், பெருந்துறை ஆா்.எஸ். ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கக் கோரி பெருந்துறைக்கு சனிக்கிழமை வந்த பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையிடம், பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவா் செந்தில்முருகன் மனு அளித்தாா்.

இதனைப் பெற்றுக்கொண்ட அண்ணாமலை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரை சந்தித்து இந்த கோரிக்கைக் குறித்து பேசுவதாக தெரிவித்தாா்.

இந்நிகழ்வின்போது பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளை ஆலோசகா்கள் சென்னியப்பன், பல்லவி பரமசிவன், செயலாளா் தங்கவேல், பொருளாளா் மோகன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.