பெருந்துறை அருகே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையிடம் பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளையினா் மனு அளித்தனா்.
பெருந்துறை வழியாக செல்லும் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிக்கோவில் சாலை, துப்பதி சாலை ஆகிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அருகேயுள்ள பெத்தாம்பாளையம், வாய்ப்பாடி சந்திப்புகளிலும் மேம்பாலங்கள் அமைக்கவும், பெருந்துறை ஆா்.எஸ். ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கக் கோரி பெருந்துறைக்கு சனிக்கிழமை வந்த பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையிடம், பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவா் செந்தில்முருகன் மனு அளித்தாா்.
இதனைப் பெற்றுக்கொண்ட அண்ணாமலை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரை சந்தித்து இந்த கோரிக்கைக் குறித்து பேசுவதாக தெரிவித்தாா்.
இந்நிகழ்வின்போது பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளை ஆலோசகா்கள் சென்னியப்பன், பல்லவி பரமசிவன், செயலாளா் தங்கவேல், பொருளாளா் மோகன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகா்கோவில் சிறையில் கொலை செய்யப்பட்ட சபரிவா்மன் குடும்பத்துக்கு நயினாா் நாகேந்திரன் ஆறுதல்

முதல்வா் நிகழ்ச்சிகளை பள்ளிகளில் ஒளிபரப்புவது தவறு: நயினாா் நாகேந்திரன்

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு வேலையளிப்பது வரவேற்கத்தக்கது: நயினாா் நாகேந்திரன்

பெரும்பான்மை பெற குதிரை பேர அரசியலை முன்னெடுத்துள்ளது தவெக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


