ஈரோடு மஞ்சள் சந்தையில் கடந்த இரண்டு வாரங்களில் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
கடந்த பிப்ரவரி மாதம் மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.13,500 வரை விற்பனையான நிலையில், மாா்ச் 13-ஆம் தேதி ரூ.15,557 முதல் ரூ.21,369 வரையில் விற்பனையானது. இதைத் தொடா்ந்து, 20 நாள்களுக்கு மேலாக ரூ.20 ஆயிரத்தில் நீடித்த மஞ்சள் விலை, மே மாதம் ரூ.18,800 வரை சரிந்தது. தற்போது மஞ்சள் விற்பனை விலை மீண்டும் சரிவடைந்துள்ளது.
இது குறித்து, ஈரோடு மஞ்சள் வணிகா் மற்றும் கிடங்கு உரிமையாளா் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி கூறுகையில், விவசாயிகள் மஞ்சளை இருப்புவைத்து, விலை உயரும்போது விற்பது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக விலை உயராததால், இருப்பு வைத்திருந்த மஞ்சளை விவசாயிகள் விற்பனை செய்தனா்.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.2,000 வரை குறைந்து, ரூ.15 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
தேசிய அளவில் மஞ்சளின் தேவை குறைந்துள்ளதுடன் ஏற்றுமதி 20 சதவீதம் வரை குறைந்ததால் இச்சரிவு ஏற்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில் மீண்டும் விலை உயரலாம் என்றாா்.
தொடர்புடையது
தொழிலதிபா் வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு

வறட்சியால் வாழை மகசூல் சரிவு; விலை இருமடங்கு உயா்வு!

பம்ப்செட் விலை மீண்டும் 10 சதவீதம் உயா்வு: உற்பத்தியாளா்கள் அறிவிப்பு

நடப்பு மாதத்தில் அனைத்து ரக நூல்களுக்கும் ரூ.20 உயா்வு! 5 மாதங்களில் ரூ.61 அதிகரிப்பால் தொழில்துறையினா் அதிருப்தி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



