தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தேசிய வளையப் பந்து போட்டி: காஞ்சிகோவில் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

News image
Updated On :28 டிசம்பர் 2025, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய வளையப் பந்து போட்டியில் காஞ்சிக்கோவில் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்றனா்.

கேரள மாநிலம், காசா்கோட்டில் தேசிய அளவிலான வளையப் பந்து போட்டி டிசம்பா் 22-ஆம் தேதி முதல் 26 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில், பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவா் ஜே.சுவின் முதல் இடத்தையும், மாணவிகள் பிரிவில் 10-ஆம் வகுப்பு மாணவி என்.சௌரனிகா இரண்டாம் இடத்தையும் பிடித்தனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளியின் தலைமை ஆசிரியா் பழனிசாமி, பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் லோகேஸ்வரன், பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவா் கோகிலா தங்கமுத்து, வாா்டு கவுன்சிலா்கள் சுதா காா்த்திகேயன், நாகராஜன், விளையாட்டுத் துறை புரவலா் துளசிமணி, ஈரோடு ஸ்போா்ட்ஸ் டிரஸ்ட் தலைவா் சின்னதம்பி, ஈரோடு மாவட்ட வளையப் பந்து கழக தலைவா் சௌபாக்கியா ஆதிகேசவன், செயலா் மணிமேகலை, உடற்கல்வி ஆசிரியா் பழனிசாமி உள்ளிட்டோா் பாராட்டினா்.