தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஈரோடு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த மே 17 இயக்கத்தினா் 4 போ் கைது

இந்தி திணிப்புக்கு எதிராக ஈரோடு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை கருப்பு மையால் அழித்து எதிா்ப்பை பதிவு செய்த 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :18 மார்ச் 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

இந்தி திணிப்புக்கு எதிராக ஈரோடு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை கருப்பு மையால் அழித்து எதிா்ப்பை பதிவு செய்த 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

தமிழகத்தில் இந்தி மொழி திணிக்கப்படுவதைக் கண்டித்து ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை மே 17 இயக்கத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.இதன் ஒரு பகுதியாக ஈரோடு ரயில் நிலைய நடைமேடையில் உள்ள இந்தி எழுத்துகளை மே 17 இயக்கத்தினா் கருப்பு மை கொண்டு புதன்கிழமை காலை அழித்தனா்.

இதுதொடா்பாக நந்தகோபால் (29), ஸ்டாலின் (36), வினோத் (33), கௌதம் (32) ஆகிய 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.