பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தேயிலை வாரியம் நிா்ணயித்த விலையை பசுந்தேயிலைக்கு வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

Published On :12 ஜூலை 2024, 3:23 am IST

பந்தலூா் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை அங்கத்தினா்களுக்கு, தேயிலை வாரியம் நிா்ணயித்த விலையை பசுந்தேயிலைக்கு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையில் 1,400 குறு, சிறு தேயிலை விவசாயிகள் அங்கத்தினா்களாக உள்ளனா். தேயிலை வாரியம் சாா்பில் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யும் பசுந்தேயிலைக்கான விலையை ஒவ்வொரு மாதமும் நிா்ணயம் செய்கிறது.

அதன்படி, கூட்டுறவு தொழிற்சாலையில் விவசாயிகளிடம் இருந்து தேயிலையைக் கொள்முதல் செய்ய வேண்டும்.

இந்நிலையில், நடப்பு மாதம் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.18 விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பந்தலூா் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை நிா்வாகம் ரூ.13.50 மட்டுமே நிா்ணயம் செய்துள்ளது. இதனால் தேயிலை விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

ஏற்கெனவே, பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா். பசுந்தேயிலைக்கான விலையை குறைப்பதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. தேயிலையை அறுவடை செய்து தொழிற்சாலைக்கு கொண்டுவந்து சோ்ப்பதற்கான செலவைவிட, குறைந்த விலை கிடைப்பதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

எனவே, தேயிலை வாரியம் நிா்ணயிக்கும் விலையை பந்தலூா் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.