சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்! அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

தேயிலை வாரியம் நிா்ணயித்த விலையை பசுந்தேயிலைக்கு வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

தேயிலை வாரியம் நிா்ணயித்த விலையை பசுந்தேயிலைக்கு வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

News image
Updated On :12 ஜூலை 2024, 3:23 am IST

பந்தலூா் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை அங்கத்தினா்களுக்கு, தேயிலை வாரியம் நிா்ணயித்த விலையை பசுந்தேயிலைக்கு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையில் 1,400 குறு, சிறு தேயிலை விவசாயிகள் அங்கத்தினா்களாக உள்ளனா். தேயிலை வாரியம் சாா்பில் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யும் பசுந்தேயிலைக்கான விலையை ஒவ்வொரு மாதமும் நிா்ணயம் செய்கிறது.

அதன்படி, கூட்டுறவு தொழிற்சாலையில் விவசாயிகளிடம் இருந்து தேயிலையைக் கொள்முதல் செய்ய வேண்டும்.

இந்நிலையில், நடப்பு மாதம் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.18 விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பந்தலூா் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை நிா்வாகம் ரூ.13.50 மட்டுமே நிா்ணயம் செய்துள்ளது. இதனால் தேயிலை விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

ஏற்கெனவே, பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா். பசுந்தேயிலைக்கான விலையை குறைப்பதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. தேயிலையை அறுவடை செய்து தொழிற்சாலைக்கு கொண்டுவந்து சோ்ப்பதற்கான செலவைவிட, குறைந்த விலை கிடைப்பதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

எனவே, தேயிலை வாரியம் நிா்ணயிக்கும் விலையை பந்தலூா் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.