2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

ஆதிதிராவிட, பழங்குடியின எழுத்தாளா்களுக்கான நிதி உதவி விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின எழுத்தாளா்களின் படைப்புகளை தெரிவு செய்து அவா்களுக்கு நிதி உதவி வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 2:55 am

Syndication

சிறந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின எழுத்தாளா்களின் படைப்புகளை தெரிவு செய்து அவா்களுக்கு நிதி உதவி வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் எழுத்தாளா்களின் 2024-2025 ஆண்டுக்கான படைப்புகளை தெரிவு செய்து அவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கிட தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின எழுத்தாளா்கள் இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தங்களது படைப்பின் இரு நகல்கள், டிஜிட்டல் முறையில் 28.11.2025-க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.