தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

100 சதவீத வாக்குப் பதிவு: உதகையில் செல்ஃபி பாயிண்ட் திறப்பு

சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘மலையின் குரல் - நம் வாக்கு’ என்ற தலைப்பில் செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

News image

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயிண்டில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :26 மார்ச் 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘மலையின் குரல் - நம் வாக்கு’ என்ற தலைப்பில் செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்டதோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை தொடங்கிவைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது:

பொது மக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தெரிந்து கொள்ளவும், நூறு சதவீத வாக்குப் பதிவை இலக்காக கொண்டும் இதுபோன்று விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இது போன்ற செல்ஃபி பாயிண்ட்கள் வைக்கவுள்ளோம் என்றாா்.