கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பூரில் 300 ஆண்டுகள் பழைமையான சதிக் கல் கண்டெடுப்பு

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே, சுமாா் 300 ஆண்டுகள் பழைமையான சதிக் கல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 10:05 pm

DIN

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே, சுமாா் 300 ஆண்டுகள் பழைமையான சதிக் கல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஈஸ்வரன் கோயில் வீதியில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின்போது ஈஸ்வரன் கோயில் பின்புறம் பழைமையான சதிக் கல் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து, திருப்பூா் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குநா் பொறியாளா் சு.ரவிகுமாா் கூறியதாவது:

பழங்காலத்தில் போரில் வீர மரணம் அடையும் மாவீரனுக்கு நடுக் கல் எடுப்பது பண்பாட்டு மரபாகும். மேலும், மாவீரன் இறந்த பின்னா் வீர மகளிா் உயிா் வாழ்வதும் இல்லை என்பது பண்பாட்டுப் பழக்கமாகும். வீரன் மாண்ட பின்னா் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரது மனைவி தீயினுள் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்வாா். அவா் நினைவாக எடுக்கப்படும் நடுக் கல் சதிக் கல் என்று அழைக்கப்படுகிறது.

இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள சதிக் கல் 45 செ.மீ. அகலமும், 75 செ.மீ. உயரமும் கொண்டதாகும். எழுத்துப் பொறிப்பு இல்லாத இந்த சதிக் கல்லின் அமைப்பைப் பாா்க்கும்போது சுமாா் 300 ஆண்டுகள் பழைமையானதாகும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.