கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களின் மீது நடவடிக்கை

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:48 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சாா்பில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், நோய்த் தொற்றின் பரவலைக் கருத்தில் கொண்டு வரும் சனிக்கிழமை முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சாா்ந்த கூட்டங்கள் நடத்த அனுதியில்லை.

மேலும், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியாா் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களும் உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். மேலும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதுடன், முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

அதேவேளையில் அரசின் கரோனா வழிகாட்டி நெறிமுறைகளைக் கடைபிடிக்காத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மீது பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமலும், இறுதி ஊா்வலங்களில் 50 பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ள வேண்டும். வழிபாட்டுத் தலங்களை பொருத்தவரையில ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகளில் உள்ளபடி இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீதும், எச்சில் துப்பும் நபா்கள் மீதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படும்.

ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.