இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நீர்வரத்து இல்லாத வட்டமலை அணையில் தேசியக் கொடியேற்ற முடிவு

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உத்தமபாளையம் வட்டமலை அணையில் சமூக நல அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது. 

News image
அணையில் நடந்த ஆலோசனைக் கூட்டம்.
Updated On :17 ஜனவரி 2021, 1:55 pm

DIN


வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உத்தமபாளையம் வட்டமலை அணையில் சமூக நல அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது. 

போதுமான நீர்வரத்து இல்லாத இடத்தில் அணை கட்டப்பட்டதால், கடந்த 30 வருடங்களாக அணை வறண்டே கிடக்கிறது. அணை கட்டப்பட்ட பிறகு இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

இதனால், விவசாயிகள் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த 30 சமூக நல அமைப்புகள் ஒருங்கிணைந்து, அணைக்கு அருகிலுள்ள அமராவதி ஆற்றிலிருந்து உபரி நீரைக் கொண்டு வந்து அணையை நிரப்பவும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வரவும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அணை மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து அணையில் தேசியக் கொடியேற்றவும், அணையைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.