தியாகி திருப்பூர் குமரன் பெயரில் நிழற்குடை, நினைவு வளைவு அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்
தியாகி திருப்பூர் குமரன் பெயரில் நிழற்குடை, நினைவு வளைவு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் குமரன் நினைவகத்தில் அவரது உருவச்சிலைக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.







