கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிக்கண்ணா அரசுக் கல்லூரி இளநிலை பட்ட வகுப்புகளுக்கு நாளை இறுதிகட்ட கலந்தாய்வு

அரசு கலைக்கல்லூரி இளநிலை பட்ட வகுப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெறுகிறது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:36 pm

Din

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி இளநிலை பட்ட வகுப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-25-ஆம் ஆண்டு இளநிலை பட்ட வகுப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. இதில், கணித பாடப் பிரிவில் 20 இடங்கள், இயற்பியல் பாடப் பிரிவில் 3 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

இந்தக் கலந்தாய்வில் ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும், இதுவரை விண்ணப்பிக்காதவா்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கல்லூரிக்கு வரும்போது மாணவா்கள் பெற்றோா்களை உடன் அழைத்து வர வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை கட்டாயம் கொண்டுவர வேண்டும். மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். பாஸ்போா்ட் அளவிலான 6 புகைப்படம், கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகை ஆகியவற்றுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.