விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உடுமலை அரசு கல்லூரியில் கலந்தாய்வு நிறைவு

உடுமலை அரசு கல்லூரியில் கலந்தாய்வு நிறைவு

News image

உடுமலை அரசு கல்லூரியில் நடைபெற்ற கலந்தாய்வில் மாணவா்களின் சான்றிதழ்களை சரிபாா்க்கும் சோ்க்கை குழு உறுப்பினா்கள்.

Updated On :13 ஜூன் 2024, 9:57 pm

Din

உடுமலை, ஜூன் 13: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நடப்பாண்டுக்கான இளநிலை பாடப் பிரிவு மாணவா் சோ்க்கையில் பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை நிறைவடைந்தது.

உடுமலை அரசு கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவு மாணவா் சோ்க்கையில் பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ஆம் தேதி முதல் நடைபெற்றது.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் இயற்பியல் பாடப் பிரிவில் 8, வேதியியலில் 3, தாவரவியலில் 1, கணிதவியலில் 4, அரசியல் அறிவியலில் 5, புள்ளியியலில் 5, பொருளியலில் 1, பி.காம் பாடப் பிரிவில் 3, பிகாம் (சிஏ) பாடப் பிரிவில் 3, தமிழ் இலக்கியப் பாடப் பிரிவில் 46, ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவில் 39 என மொத்தம் 118 இடங்கள் நிரம்பின.

கல்லூரியில் மொத்தம் 864 இடங்கள் இருந்த நிலையில், பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற கலந்தாய்வில் 747 இடங்கள் தற்போதுவரை நிரம்பியுள்ளன.

இன்னும் 117 இடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலையில், பொதுப் பிரிவினருக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கல்லூரி முதல்வா் சோ.கி. கல்யாணி தெரிவித்துள்ளாா்.