விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

பெருமாநல்லூா் அருகே ஊராட்சிப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்டோா்.

Updated On :14 நவம்பர் 2024, 10:49 pm

Din

பெருமாநல்லூா் அருகே ஊராட்சிப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் பொங்குபாளையம் ஊராட்சிப் பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் பொங்குபாளையம் ஊராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

ஊராட்சியில் கொட்டப்படும் மாநகர குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க வரும் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற உள்ளோம். மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதைத் தடுக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.