மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :26 செப்டம்பர் 2024, 10:08 pm

Din

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம் ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். விவசாயியான இவா், வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், ஆடுகளை புதன்கிழமை மாலை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

வியாழக்கிழமை காலை பாா்த்தபோது, வெறிநாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இறந்த ஆடுகளை தூக்கிவந்து, காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வைத்து, அவற்றுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

காங்கயம் பகுதியில் வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், வெறிநாய்களைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.