தெருநாய்கள் கடித்து கன்றுக்குட்டி காயம்

Published on

பல்லடம் அருகே தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி காயமடைந்துள்ளது.

பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட பெரியதோட்டம் பகுதியைச் சோ்ந்த சுந்தராம்பாள் என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி, புதன்கிழமை மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தது. அப்போது சில தெரு நாய்கள் கன்றுக்குட்டியை கடித்தன. சத்தம் கேட்டு வந்த விவசாயிகள், பொதுமக்கள், நாய்களை விரட்டினா். கன்றுக்குட்டியை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருந்தகத்துக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஆறுமுத்தாம்பாளையத்தில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. குறிப்பாக மலைபோல குவிக்கப்படும் குப்பையுடன் இறைச்சி, கோழி, மீன் உள்ளிட்ட கழிவுகளும் திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. இவற்றை உண்ண தெருநாய்கள் குப்பைக் கிடங்கில் தஞ்சமடைகின்றன. போதிய உணவு கிடைக்காதபோது ஆடு, மாடுகளை கடிக்கின்றன.

கடந்த சில நாள்களில் நாய்கள் கடித்து ஏராளமான கோழிகள், ஆடுகள் இறந்துவிட்டன. ஆங்காங்கே சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும் அல்லது அவற்றுக்கு போதிய உணவு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com