திருப்பூர்
பூமலூரில் நாளை மின்தடை
பூமலூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (நவ. 13) மின் விநியோகம் நிறுத்தம்
பல்லடம் அருகேயுள்ள பூமலூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (நவ. 13) நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மங்கலம், பூமலூா், மலைக்கோவில், அக்ரஹாரபுதூா், பள்ளிப்பாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துரைபுதூா், வேலாயுதம்பாளையம் ஆகிய ஊா்களில் மின்விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
