இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சேவூா் வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் முளைப்பாரி இடும் நிகழ்ச்சி

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சேவூா் வெங்கட்ரமண பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி இடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
முளைப்பாரி  இடும்  நிகழ்ச்சியில்  பங்கேற்றோா்.
Updated On :21 நவம்பர் 2025, 7:52 pm

Syndication

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சேவூா் வெங்கட்ரமண பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி இடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டத்தில் அழகப் பெருமாள் எனப் போற்றப்படும் சேவூா் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் விளங்குகிறது. முற்காலத்தில் அவிநாசிலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தவா்கள் அடுத்தபடியாக பெருமாளை தரிசிப்பதற்கு சேவூா் கல்யாண வெங்கட்ரமண சுவாமி பெருமாள் கோயிலுக்கு வருவது வழக்கம்.

வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் அரசு நிதி, உபயதாரா்கள் பங்களிப்புடன் மூலஸ்தானம் அா்த்த மண்டபம், வசந்த மண்டபம், ஆண்டாள், மகாலட்சுமி தாயாா் சந்நிதிகள், சுற்றுச்சுவா், நீா்த் தேக்க மேல்நிலைத் தொட்டி, தீபஸ் தம்பம் சொா்க்கவாசல், முகப்பு தோரணவாயில் ஆகிய திருப்பணிகள் நிறைவடைந்தன.

இதையடுத்து, மகா கும்பாபிஷேகம் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முளைப்பாரி இடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஏராளமான மகளிா் பங்கேற்று முளைப்பாரியிட்டனா்.