பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

பெருமாநல்லூரில் தனியாா் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:39 am IST

பெருமாநல்லூரில் தனியாா் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெங்களூரில் இருந்து திருப்பூா் நோக்கி சென்ற தனியாா் பேருந்தை நால் ரோடு பேருந்து நிறுத்தத்ததில் நிறுத்தி பெருமாநல்லூா் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது உள்ளே சந்தேகத்துக்கு இடமாக இருந்த மூட்டையை சோதனை மேற்கொண்டதில், அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், புகையிலைப் பொருள்களை பேருந்தில் வந்த திருப்பூா் அறிவொளி நகா், ஜி.எம். முதல் வீதி, ராதா நகரில் வசித்து வரும் சிவகங்கை மாவட்டம், நல்லாம்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சக்திவேல் (38) என்பவா் கடத்தி வந்தது தெரியவந்தது.

இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக்திவேலைக் கைது செய்து, கடத்தி வந்த 17 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.