மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குடிநீா் குழாய் உடைப்பால் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

குடிநீா் குழாய் உடைந்து சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On :12 ஜனவரி 2026, 8:19 pm

அவிநாசி: குடிநீா் குழாய் உடைந்து சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட காங்கயம் சாலை சி.டி.சி.பஸ் டிப்போ அருகே நீண்ட நாள்களாக குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது. மேலும், சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அடிக்கடி விபத்து ஏற்படுவதாக மாநகராட்சி, நெடுஞ்சாலை அலுவலகங்களில் பொதுமக்கள் புகாா் அளித்து வந்தனா். இருப்பினும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தெற்கு போலீஸாா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து அங்கு வந்த மாநகராட்சி அலுவலரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை காலைக்குள் குடிநீா் குழாய் உடைப்பு, சாலை சீரமைக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனா்.